குடியரசு தினம்

April 5, 2007

ஆங்கில ஆதிக்கம்  கீழ் ,

ஐந்நூறு ஆண்டுகள்  நாம் ,

கத்தியின்றி இரத்தமின்றி ,

அஹிம்சை என்ற கொள்கைப் பற்றி,

சுதந்திரம் பெற்றோம் ,

பல தியாகங்கள் கற்றோம் ,

முழு சுதந்திரம் , நம் குடியரசு தினம் ,

கொடுத்தது மக்கள் ஆட்சிக்கு பலம் ,

சுதந்திரத்தின்  முழுமை ,

மக்களின் பல  உரிமை ,

எழுத்தின் மூலம் சட்டங்கள் ,

காத்து நிற்கும்  வட்டங்கள் ,

வந்தது  குடியரசு தினம்  .

ந்மக்கெல்லாம்  கொண்டாட்டம் ,

முப்படைகள் அணிவர,

அழகு சீருடை ஒரு மிடுக்கைத் தர

பாரதத் தலைவருக்கு வண்க்கம் செலுத்த ,

மனம்  கொள்ளைப் போகிறது ,

தேசப் பற்று மிளிர்கிறது ,

வீரக் குழந்தைகள் பரிசைப் பெற

நாட்டு வீரர்கள் பதக்கங்கள் பெற 

ப்லதரப் பட்ட காட்சி மாடல்கள்,

கூடவே  முழங்கும் அழகிய பாடல்கள்

பள்ளிக் குழந்தைகளின் சிறந்த அமைப்பு ,

பல நடனங்களின் சிறந்த கருத்து ,

முடிவில்  பறக்கும் விமானங்கள் ,

பிரமிக்க வைக்கும்  கரணங்கள் 

ஒளிவீசும் அதன்  வாலகள் ,

மேலிருந்து  உதிரும்  பலப் பூக்கள்,

ஆஹா அழகே அழகு நம் குடியரசு தினம் ,

உரிமைக் காப்போம் என்று சொல்லும் மனம் ,,

அன்புடன்  விசாலம்   ,


மனிதன் எங்கே போகிறான்

April 5, 2007

மிருகங்களுக்குப் பகுத்தறிவு  இல்லை ,

ஆனால் நெறி அவைகள் தவறுவதில்லை,

புலி பசித்தாலும்  புல் தின்னுவதில்லை,

பசுவோ பால் கொடுக்கத் தவறுவதில்லை,

மேலிருந்து கீழ் பாயும்  நதியும் ,

தன் திசையை மாற்றுவதில்லை ,

உரியக் காலத்தில்  பழங்களும் ,

பழுக்கத் தவறியதில்லை ,

மல்லிகையோ தன்  மணம்  வீச

ஒருக்காலும்  தவறியதில்லை

இயற்கை தன் கடமையிலிருந்து

ஒரு பொழுதும்  மாறுவதில்லை,

ஆனால்,,,,,

ஆறரிவுப் படைத்தவன்  மாறிவிட்டானே,

எதையோ தின்கிறான் ,

எப்படியோ வாழ்கிறான் ,

கட்டுப்பாடுகளை உடைக்கிறான் ,

தன் இஷ்டப்படி  ஆடுகிறான் 

மரங்களை வெட்டுகிறான்

 மிருக இனத்திற்கு போகிறான் 

உயர்  எண்ணங்களை இழக்கிறான் ,

தாழ்ந்த மட்டத்தை  அடைக்கிறான் 

பணத்திற்காக ஓடுகிறான் ,

இறைச் சக்தி தேட மறுக்கிறான் ,

சத்தியத்தை நழுவ விடுகிறான் ,

அனபிற்கு விலையும்   கேட்கிறான் ,

தெயவம் பொன்ற பெற்றோர்களை

முதியோர் இல்லத்தில்  போடுகிறான் ,

எங்கே போகிறான்  மனிதன் ?

என்று திருந்துவான்  மனிதன் ?

அன்புடன் விசாலம் ,


நதி

April 5, 2007

அன்பு குழந்தைகளே ,,நதிகளை நாம் பார்த்திருக்கிறோம் ,,எவ்வளவு  அழகாக ஓடுகிறது?

சில இடத்தில் வளைந்தும்  சில இடத்தில்  மிக வேகமாகவும் சில இடத்தில் அமைதியாகவும்

போவதைப் பார்த்து நாம் பரவசமடைகிறோம் சில புண்ணிய நதிகளை பூஜையும் செய்கிறோம்.சிலர் வீட்டில் பூஜை செய்யும் போது சில புண்ணிய நதிகளுக்கும் பூஜை

செய்வார்கள் ” கஙகை யமுனை  கோதாவரி  ஸரஸ்வதி நர்மதை  சிந்து காவேரி ,,,,

முதலிய  நதிகள் இந்தக் கலசத்தில்  வரவேண்டும்  என்று ஸம்ச்கிருதத்தில் மந்திரம்

சொல்வார்கள்.

இப்போது நதியைப் பார்த்து நாம் என்னவெல்லாம்  கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போமா?நதி   தன்னலம் கருதாமல் எல்லோருக்கும் உத்வி  புரிகிறது கல்,முள் மேடு 

பள்ளம் போன்ற இடங்களில் சலிக்காமல்  ஓடுகிறது  கடைசியில் தன் இலட்சியத்தைப் பூர்த்திச்

செய்து கடலில்  கலக்கிறது சாதி  பேதம் பார்க்காமல் .பணக்காரர்  எழை என்று பார்க்காமல்

எல்லோருக்கும்  சம்மாக நீர் வழங்குகிறது உச்சியிலிருந்து விழுந்தாலும்  மனம் கலங்காமல்

மேலே வழியைத் தொடர்கிறது ,பார்த்தீர்களா! எவ்வளவு  பாடம்  கற்றுக் கொள்கிறோம்,

நீங்களும் தோல்வி ஏற்பட்டாலும்   மனம் கலங்காமல்  மேலே  பயணம் செய்ய வெற்றி

நமக்கே ,,,தேவைப் பட்டால் வீரமாகவும் நதிப் போல்  சுழல வேண்டும் மற்ற நேரத்தில்

பணிவாக தெளிவாக சாந்தமாக  இருக்க வேண்டும்  பார்த்தீர்களா  இயற்கையிலிருந்து

எவ்வளவு  கற்றுக்கொள்ள முடிகிறது   நாம் இயற்கையோடு  ஒன்றி வாழ்வோமே ,,,

அன்புடன்  அம்மம்மா…விசாலம் 

நதியின்  தியாகம் ,,,,,,,,,,இதைப் பாடிப் பாருங்கள்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நதியே  உன் ஓட்டமென்ன ?

வழியில்  ஆடும் ஆட்டமென்ன ?

பாம்பு போல் வளைகிறாய்,

உச்சியிலிருந்து  விழுகிறாய் 

மின்சாரம்  தருகிறாய் ,

திடீரென சுழலுகிறாய் ,

சாதுவாகவும்  ஆகிறாய் ,

எவ்வளவு இடைஞ்சல்  பார்க்கிறாய் 

பொருட்படுத்தாமல்  ஓடுகிறாய் ,

கல்லும்  முள்ளும் குத்த 

கவலைப்படாமல்  ஓடுகிறாய் ,

ஒருப் பாகுபாடு இல்லை 

ஜாதி பேதம் இல்லை 

எங்களுக்கு நீர் வழங்குகிறாய் ,

சமுத்திரத்தில் கலக்கிறாய் 

உனக்கென்று ஒன்றுமில்லை ,

எல்லாம் தியாகம் செய்கிறாய் 

அன்புடன்


போகிப் பண்டிகை

April 5, 2007

வந்தது போகிப் பண்டிகை

சூழ்கிற்து ஒரேப் புகை,

வீட்டின் குப்பைகள் வெளியே வார,

வெளிக்குப்பைகளும் அதனுடன்  சேர,

தெருவுக்குத்தெரு  அதுவும் எரிய ,

சுற்றுச் சூழ்நிலை வெகுவாய்க் கரிய,

அளவிலாத மாசில் மூச்சும் அடைக்க,

இதுத் தேவையா என்று மனமும்  கேட்க,,,,,,,

யார் சொல்லுவார் பதில்?

இந்தச் சமூகத்தில் !

உன் மனதில் குப்பை நிறைந்துள்ளதே!

அதில் அழுக்கும் சேர்ந்துள்ளதே ,

கெட்ட எண்ணங்களும் சுழலுதே1

அன்பும் வாய்மையும்  போனதே ,

அதையே முதலில் எரியப்பா,

மனதைப் புனிதம் ஆக்கப்பா ,

அதுதான் போகித் திருநாளாம் ,

அன்பு நிறைந்த மன நாளாம்

அன்புடன் விசாலம்


பொங்கல் திருநாள்

April 5, 2007

சூரியன் உத்தராயணத்தில் பிரவேசிக்கும்  நாள்தான்  இந்தப் பொங்கல் திருநாள் இதை

மகா சங்கராந்தி என்று வடக்கில்  சொல்வார்கள் சூரிய ப்கவான் நமக்குக் கர்ம யோகத்தை விளக்குகிறார், நம் மனதிலுள்ள இருளை நீக்கி ஞானம்  என்ற ஒளியைப் பெற்றுக் கொள்

என்றுச் சொல்லாமல் தன் மூலமாகத் தெரியப் படுத்துகிறார் அந்தச் சூரியச் சக்தி

solar energy யினால் தான் உலகமே இயங்குகிறது ஒரு நாள் சூரியன் இல்லையென்றால்

உலக்மே இருள் தான் மழை வருவதும்  செடிக் கொடிகள் வள்ருவதும்  நமக்கு உண்வுக்

கிடைப்பதும் இந்த ஆதவனால்தான்  சூரியன்  என்றாலே அப்பழுக்கிலாதத் தனமை

ஒழுங்கு perfection ஒரே  சீரான ஓட்டம் பிரதி பலன் பார்க்காமல் செய்யும் கடமை எல்லோரும்  சமம்  என்ற நோக்கு தன் ஒளியை எல்லோருக்கும் தந்து  தான் இன்பமுறல்  எல்லாம்  நமக்குப்

பார்க்க முடிகிறது “தத்வ மஸி” என்றத் தத்துவம்  விள்ங்குகிறது இந்த நன்நாளில் 

ஆதித்ய ஹிருதயமும்  காயத்திரி மந்திரமும்  ஜபித்தால்   அதனுடையச் சக்தியே தனிதான் 

ஏழைத் தன் வியர்வைச் சிந்தி  ஒவ்வொருத் துளிகளையும்  தன் பயிறுக்குள் அர்ப்பணித்து

நமக்கு உண்வாகக் கொடுக்கிறார்கள்  அவர்கள் அந்த விளைச்ச்லுக்காக   கடவுளுக்கு

மறக்காமல் தங்கள் முதல் சாகுபடிக் கதிரை அர்ப்பணிக்கிறார்கள் .நாம் இன்று நமக்கு

உண்வை வழங்கும்  அவர்களை நினைத்துக் கொண்டு  அவர்கள் பயன் படும்படி எதாவது நல்லக் காரியம் செய்து ஒரு புது விதமாகப் பொங்கல் கொண்டாட்லாமே ,,,,,,,

அன்புடன் விசாலம்


கதா காலக்ஷேபம்

April 5, 2007

நம்பிக்கை ,முத்தமிழ்  இல்லம்  ………,,,,சபாக்களின்   முதல்வர்களே  எனக்கு ரொம்ப நாளாக

கதா காலட்சேபம் செய்ய ஆசை  டிவியில் முயன்றேன்  கிடைக்கவில்லை   .பழையக் கால வில்லுப் பாட்டு  கதாகாலட்சேபம்   போன்றவை இப்போது காண்பது அரிதாகி விட்டது

தற்போது திருமதி விசாகா ஹரி  என்ற பெண்மணி கதா காலட்சேபம்  மிகவும் அழகாக்

செய்கிறாள் இந்தக் கலையை நாமும் வளர்க்கலாமே ..சரி என்க்கு  ஒரு சான்ஸ் கிடைக்குமா? என்க்கு ஆதரவு தந்து கைத்தட்டி {தட்டினலும் காது கேட்காதே}ஊகக்கம்

கொடுப்பீர்கள் என்  நம்புகிறேன் பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு வீட்டின் உள்ளேயே  காபி டிபன் ,,,,எதாவ்து வீசி எறிந்தால் ……,,,,உங்கள் கணினி,,,ஜக்கிரதை ..இந்த

ஞாயிறு அன்று   நடத்த சான்ஸ் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்  பாட்டும்  உண்டு 

ஆனால் உங்களுக்கு கேட்காது ,ஹா ஹா ,,,அன்புடன் விசாலம்


பகுள பஞ்சமி

April 5, 2007

இந்த பகுல பஞ்சமி அன்றுதான்  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜ

ஸ்வாமிகள் சித்தி அடைந்தார் அவர் வேதம் சாஸ்திரம் இதிஹாசங்கள் முதலியவைகளைப்

படித்துப் பூரணப் பாண்டித்யம் பெற்றார் ..அவரைப் பற்றி நிறைய எழுதலாம் ஆனால்  படிக்காமல் தள்ளிவிட்டால்  என்ன செய்வது என்பதால் ஒரு சிலவற்றை மட்டும் நினைவுக்

கொண்டு எழுதுகிறேன் அவர் தன் கடைசிக் காலம் நெருங்குவதைத் தெரிந்துக் கொண்டு

ஐந்து நாட்களுக்குமுன் ஆபத் சன்யாசம் எடுத்துக் கொண்டார் ,புஷ்ய பஞ்சமி  அதிக்காலை

தியாகப்பிரும்மம்  தன் ஸ்னானம் முடித்துக்கொண்டு.வந்து அமர்ந்தார் கிட்டத்தட்ட சுமார்

95 கோடிராம நாமம் ஜபித்தவர் ,ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியை ஆராதனைச் செய்யத் தொடங்கினார் பக்தர்களும்  சிஷ்யர்களும்  வந்து அமர்ந்துக் கொண்டனர் எல்லோரையும் இடைவிடாது தாரக  ராம மந்திரத்தைச் சொல்லச்சொன்னார்  அந்த இடம் முழுவதும்

ராம் ராம் ராம் என்ற அழகான ஒலி பரவி எல்லோரும் உள்ளிருக்கும்  ஒளியைப்

பார்த்தனர் அப்போது  மனோஹரி ராகத்தில்”  பரிதாபமு  கனியாடின ,,,”பலுகுல மரசிதிவோ

என்னும் கீர்த்தனைப் பாட கையில் சின்முத்திரைத் தரித்து நேரே ராம தரிசனம்  கண்டு

கபாலச்சின்னமாய் சித்தி அடைந்தார்கள்

திருவையாறில்  பஞ்ச ரதனக் கீர்த்தனைகள் தியாகரஜ ஆராதனையின்  போது  கேட்டிருப்பீர்கள்,முதல் ஆராதனை 1907ல் ஆரம்பித்ததுபின் 1925ல் 7ம்தேதி

திருமதி நாகரத்ன அம்மாள் சமாதியைக் கட்டிபிருந்தாவனம் அமைத்து   கும்பாபிஷேகம்

நடத்தினர்கள் அதிலிருந்து விடாமல் இந்த ஆராதனை நடக்கிறது  சங்கீதப் பக்தர்கள்

அந்த மஹானை கண்டிப்பாக நினவுக்கோருவாரகள் என்பது திண்ணம் 

அன்புடன் விசாலம்

Reply Reply to all Forward

ஆராதனை நாள்

April 5, 2007

தியாகராஜசுவாமிகளின்  ஆராதனை நாளில் ஒரு ஆங்கிலேயரும்  ஒரு அமெரிக்கரும்

பங்குப் பெற்றுச் சிறப்பித்தினர் ,வியப்பாக இருக்கிறதா ?வருடம் 1953ல் மிஸ்டர் ஜான்

கோட்ஸ் என்பவரும் மிஸ்டர் , ஹாரிபவர்ஸ் என்ற அமெரிக்கரும் திருவையாறு உத்சவத்திற்கு வந்திருந்தனர் ,அவர்களும் பகுள பஞ்சமி அன்று கவேரியில்  ஸ்னானம் செய்து

நெற்றியில் திருநீரும் குங்குமமும் அணிந்து இடுப்பில்  வேஷ்டித் தரித்து அங்கவஸ்திரத்துடன் 

கோஷ்டியில் அமர்ந்துக் கொண்டு  எல்லா பாடல்களையும்  பாடினார்கள்.இந்நிகழ்ச்சி முடிந்ததும் 

அந்த அமெரிக்கர் ,,பவர்ஸ் தானும்  தனியாக மேடைக் கச்சேரிச் செய்ய விரும்புவதாகவும் அன்மதி அளிக்கவேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டதில் அவ்ருக்கு வாய்ப்புக் கிடைத்தது,

ஸ்ரீ ரகுவரப்ரமேய என்று காமபோதி ராகத்திலும்  “கீதர்த்தமு”என்று சுருட்டி ராகத்திலும்  அந்தமண்டபத்தில்  45000 ஜனங்கள் முன் பாட எல்லோரும்  பரவசமானார்கள் அ வரின தியாகராஜப் பக்தி அவரை மேடையில் ஏற்றிவிட்டது ஸ்ரீமான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் அவரை மிகவும்  ஊக்குவித்தார்   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அன்புடன் விசாலம்

Reply

உலக ரெய்கி நாள்

April 5, 2007

உலக ரெய்கி நாள்,,,நாளை எல்லோரும்  முடிந்த அளவில் உலக க்ஷேமத்திற்காக் 

“global peace தியானம் செய்யலாமே 

touch therapy ,,அம்மாவின்  மடியில்  குழந்தை  அழ ,,தாய் அதை அரவணைத்து மார்பிலோ அல்ல்து முதுகிலோ மெல்லியதாகத் தட்டிக் கைவைக்க  அது நிம்மதியாகத் தூங்க் 

ஆரம்பிக்கிறது இதேபோல்  நண்பனுக்கு  நண்பன் தோளில் கைவைத்துத் தடவிக் கொடுக்க 

நண்பன்  கவலையை மறக்கிறான்    காதலி   எதோ வருத்தத்தில் அழ காதலன்  ஆதரவுடன்  அவளை அணைக்க முதுகில் கை வைக்க  அவள் ம்னம்  இலேசாகிறது 

ஆஸ்பத்திரியில் நோயாளியைப் பார்க்க  ஆதரவுடன்  பாசத்துடன்  அவர் கையைப் பிடிக்க அவருக்கு நோயின் வலி குறைகிறது ,,இந்தத் தத்துவத்தில் தான் ரெயகி செயல்படுகிறது  

பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியை  நம் கையில் வரவழைத்து உடலில் உள்ள பிராண சக்தியை 

அதிகரித்து  ஒவ்வொரு சக்ராவில் இருக்கும் எதிர்மறை அடைப்பு negative blocks ஐ நீக்கி

நற்றலைகளால் positive vibration உடலுக்குள் நல்ல இரத்த ஒட்டம் சீரான காற்றோட்டம் 

சீரான் உயிரோட்டம்  ஜீவகாந்த ஓட்டம் உண்டாக்கி உடலில் வரும் பிரச்சனைகளை

சரிப்படுத்த ரெய்க்கி ஒரு அருமருந்து  ..பக்க விளைவு இல்லை  உலகத்தில்  எந்தக் கோடியில் இருந்தாலும்   இந்த சக்தியை அனுப்ப முடியும்  ஆனால் அதைப் பெறுபவர் நம்பிக்கையோடு

பெறவேண்டும்   ,,,பின் இதைப் பற்றி விவரமாக எழுதிகிறேன்      அன்புடன் விசாலம்   ,, 


தலைக்காணி மந்திரம்

April 5, 2007

மந்திரத்தில்  ஒரு சிறந்த மந்திரம்

தலைகாணி மந்திரமாம்  

பெண்களுக்கென்றே பிறந்த மந்திரம் 

படுக்கை அறையில் ஓதும் மந்திரம் 

பண்டைக்காலாமாய் திகழும்  மந்திரம் ,

முக்கியப் பங்குப்  பெறுவது தநதிரம்  ,

குரு இல்லாமலே கற்கும்  மந்திரம் 

சிலவில்லாமலே படிக்கும் மந்திரம் 

சொன்னவுடன்  செயல் படும் ,

பெட்டிப் பாம்பாய் மாற்றி விடும் ,

தன் தாயைப் புகழ்ந்த வாய் ,,,காலை 

மந்திரம்  கேட்டு  வாறும்  காலை ,

பெண்களுக்கே கை வந்தக் கலை ,

கண்ணீரும் இதற்கு ஒரு தலை,

உள்ளே கோபத்துடன்  போகும்  மகன் ,

சிரித்த முகத்துடன் காலை வருவான் ,

சண்டைப் போட  உள்ளே  நுழைவான் ,

மந்திரம் கேட்டு மயங்கி வ்ருவான் ,

மனைவியின்  சுகத்தில் தன்னை மறப்பான் ,

ஈன்றத் தாயையும்  பகைத்துக் கொள்வான் ,

நன்மைக்கும் இது  உபயோகம்

சுய நலத்திற்கும்  இது ஒரு யோகம் ,

தலைக்காணி மந்திரம்  சிறக்கட்டும்.

பொது நலத்திற்கு மனைவி ஓதட்டும் ,,

அன்புடன் விசாலம்