ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

கருணா சாகரம்  சாந்தம்

அருணாசல  வாசினம் 

ஸ்ரீ சேஷாத்ரி குரும் வந்தே

பிரும்ம பூதி  தபோநிதிம்

அன்புத் தாய் மரகதம்

பெற்றெடுத்த உத்தமனாம் ,

சேஷாத்ரி என்ற பெயரும் சூட,

ஒரு மரகதமாக்வே ஒளிர்ந்தார் ,

ஒரு தெய்வக் குழந்தை ஆனார்

ஒரு சித்தப் புருஷர் அவதரிதார் 

ஒருநாள் ,,,தாயுடன்   அவர் ,,,

பொம்மைக் கடைக்குச்செல்ல

பொம்மைக் கேட்டக் குழந்தை

ஒரு கிருஷ்ண பொம்மை எடுக்க

காசு வாங்க மறுத்தார்  ,,கடைக்காரர்

அந்தத் தங்கக் கையைப்

பிடித்தும்  கொண்டார் .

“சாதாரணக் குழந்தையில்லன்  இவன்

கைப்பட்டாலே  பொன்னாகும் அம்மா”

பெற்றோரின் மறைவு

மனதில் புகுந்த வைராக்கியம்,

சேஷாத்ரி உதித்தது   நம்  பாக்கியம்

ம்னம் போனது  இறைச் சிந்தனையில் ,

நேரம்  கழிந்தது  சிவபூஜையில் ,

மயானத்திலும்   உபாசனம் ,

சிவபெருமானின் த்ரிசனம் ,

வானத்தில் பாடிப் பறக்கும் 

தேவதையும்  கண்டார்  ,

பார்த்ததைப் பகிர்ந்தும் கொண்டார் ,

“பைத்தியம் பிடித்தது  ‘என்ற உறவினர்,

மயானம் போனால் வீடும் நுழையாதே’

என்ற உத்தரவும்  பிறந்தது ,

வீட்டை விட்டார் ,

கோவிலில்  அடைக்கலம் ,

கண்டார் ஒரு பொன்மேனி யோகியை

அவர் அணிந்தது தேங்காய்கப்பறை ,

நான்கு சீடர்கள் உடன் இருக்க .

தட்சிணாமூர்த்தி தரிசனம் ,

மெய்சிலிர்த்தார்

பரவசமானார் ,

கண் நிரம்பி  குளமாகி கைக்கூப்பி

உடலும் விழுந்தது சாஷ்டாங்கமாக ,

அவர் நிலைக் கண்ட குரு ,

திருவாய் மலர்ந்தார்

அருளினார்  நயன தீக்ஷை

வழங்கினார்  ஞான உபதேசம்  ,

தன் நிலை மறந்தார் ,

தன்னையு,ம் மறந்தார் ,

வந்தனர்  உறவினர் ,

“தகப்பனார் சிரார்தம் “

அழைத்தனர்  அதட்டலுடன் ,

மசியவில்லை சேஷாத்ரி

“நான் சன்யாசி 

சன்யாசிக்கு  கர்மமேது ?

வலுக்கட்டாயமாக

இழுக்கப்பட்டார் 

திதி முடியும் வரை

தள்ளப் பட்டார்  ஒரு அறையில்

கதவும் பூட்டப்பட்டது ,

பித்ரு கர்மா முடிந்தது 

கதவும் திறந்தது

“சேஷாத்ரி…சேஷாத்ரி,,,

எங்கே போனாய்?

எங்கே போனார் ,எப்படிப் போனார்?

மாயமாய்  மறைந்து விட்டாரே !

சித்த புருஷர் ஆயிற்றே

அடைத்து வைக்க முடியுமா ?

திருவண்ணாமலை  ,,

சித்தர்கள் க்ஷேத்திரம்

முக்திக்கு  பாத்திரம் 

அங்கும்  இங்கும் அலைந்தது 

சேஷாத்ரி என்ற பாத்திரம் 

வானமே கூரை 

எங்கும் இருந்தார்  ,

எதையோ சாப்பிட்டார் ,

எல்லோரையும்  வண்ங்கினார் 

“ஸர்வம்   பிரும்ம மயம் “

எங்கும் பிரும்மத்தைக் கண்டார் ,

ஒரு ஏழு கழுதைகளை  வண்ங்கி 

கண்களில் ஒத்திக் கொள்ள்

சிரித்தனர்  மக்கள் ,

ஒருவர் துணிச்சலுடன் கேட்டார் ,

“எனப்பா ,,,கழுதையை ஏன் 

கண்களில் ஒற்றிக் கொள்கிறாய்?

“கழுதையில்லை அப்பா இது

சப்த ரிஷிகள் அல்லவா ?

அஹஸ்தியர்   ஜமதக்னி ,,,,,,

என்று வரிசைப்படுத்த

மக்கள் மெய்மறந்தனர்

நடமாடும்  இறைவன்  ஆனார்

பேசும்  தெய்வம்  ஆனார் 

அவதார  புருஷ்ர் ஆனார் 

அரும் பெரும் சித்தர்  ஆனார் 

அருணாசலேச்வருடன் கலந்தார் 

 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அவர் சரித்திரம் படித்தப்பின்  த்போவன்ம் சென்று  அவர் தரிசனம் செய்து வந்தேன்

அந்தத் தினத்திலிருந்து  அவர் சரித்திரத்தை எழுத  ஆவலாக இருந்தேன் ,ஒரு  சிறு முயற்சி 

அவ்வளவுதான்  , தயவு செய்து படிக்கவும் ,,,,அன்புடன் விசாலம் . 

One Response to “ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்”

  1. kirubanandan Says:

    please check spelling mistakes

Leave a Reply