The clever crow

April 4, 2007

The  mother crow called   caw ,caw caw ,

Come  my dear son .caw  caw ,caw  ,

The baby crow  heard ,flew near,

and sat with  his mother ,dear ,

With an affectinate voice she said ,

{“my son}  you dont get b cheated ,

and  you  dont  cheat  others ,

all are our sisters and brothers ,

Think   twice   before  you  do 

with perfection the work u do”

“Yes mummi  caw ,,caw  caw ,,

I”l  follow  ,,,caw,,caw,,caw,,,

With lovely spirit and happy mood ,

He flew up  and  feeling  good 

Down on the road ,saw a vada  shop 

A boy brought vada with a stylish hop 

The  vada also  fell  down ,

The young crow  flew down ,

picked  it  up with  its  beak ,

Flew and sat  on the tree of teak,

Cunning  fox  enjoyed the scene ,

Wanted to grab it ,,,what a mean!

Thought  a plan  to cheat   it ,

Looked up and said ‘your music is fit ,

please  sing  a song  with your lovely voice 

you shouldnt escape  there is no choice ”

Quickly  finding  the  plan  of  the  cheat,

Removed  his vada ,and kept under  the feet,

Sang beautifully  “caw  caw  caw 

Dont cheat me   go back  ka ka ka ‘

The dissappointed  fox  bent his head ,,

{children} follow the words  of mother  said ”

with love Ammamma  vishalam  ,,,,,  


நானல்லவா குருடன்

April 4, 2007

பாதைத் தவறியது,

இருளில் நடந்தேன் 

நடந்துக் களைத்தேன் 

போகும் இடம் எது?

எத்திசையில் போகிறேன்?

கால்கள் தடுமாறின ,

எதிரில்  முட்டிக்கொண்டேன் ,

“எங்கே போகணும்?” 

ஒரு அன்புக் குரல் 

என்னை அழைத்தது ,

போகும் இடம் சொன்னேன் ,

ஒரு கம்பை நீட்டியது 

இறுகப் பிடித்தேன்  கமபை ,

அவன் துணையில் நான்

அவன் முன்னேற

பாதையில் இடைஞ்சலில்லை,

ஒன்றிலும் மோதவில்லை

நானும்  நடந்தேன்

இருள் போய்  ஒளி தெரிந்தது,

“போய் வாங்கோ “

இனி வெளிச்சம் தான் “

அன்புக் குரல் விடைப் பெற்றது,

நிமிர்ந்துப் பார்தேன்

பிரமித்துப் போனேன்

கண்ணிருந்தும் நான் குருடனானேன் ,

கண்தெரியாதவன்  எனக்கு வழிக்காட்டி

அவன் மணக்கண்ணின் ஒளி

எனக்கும்  ஒளியானது,,

அவன் அன்பில் 

என் பாதையும் சீரானது 

நல்லக் கண்கள் இருந்தும் 

நானல்லவா குருடன் 

அன்புடன் விசாலம்  

 ,,


தீபம்

April 4, 2007

கார்த்த்கைத் தீபம் வரிசையாக சுடர் விட  பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான் ,தீபத்திற்கு

எந்த எண்ணெய் விட்டால்  என்ன பலன் என்பதை ஒரு ஆன்மீகப் புத்தகத்தில்  முன்பு ப்டித்தேன் ,அதை உங்களுக்கும் சொல்கிறேன் 

நெய் ,,,,,,சகலவிதமான செலவம்  கணபதி  மஹாலட்சுமிக்கு  உகந்தது

நல்லெண்ணெய்       ,,,,,,,எல்லா பீடைகளும் விலகும் …{நாரயணன்}

விளக்கெண்ணை புகழ் ப்ந்து சுகம்  தாம்பத்திய சுகம்

கடலை எண்ணெய்  ,,,,, ஏற்றுவதைத் தவிர்கவும் 

தேங்காய் எண்ணெய்   கண்பதிக்கு  உகந்தது

இலுப்ப எண்ணெய்         ருத்ராபதிக்கு  உகந்தது

ஐந்து வித எண்ணெய் கலப்பு   ,,நெய்   வேப்பஎண்ணை விள்க்கெண்ணை ,தேங்காயெண்ணை

ஒரு மண்டலம் ஏற்ற            தேவியின்   அருள்

மூன்று வித  எண்ணெய் ,,,,,வேப்பெண்ணை நெய்  இலுப்பெண்ணை ,,,,,செலவம்  குலதெய்வம்

திரி   வகைகள்

பஞ்சு திரி ,,,மிகவும் நல்லது

தாமரைத் தண்டு   பாவம் போக்கும்  செல்வம் நிலைத்து நிற்கும்

வாழைத்தண்டு  ,,,,,,,குழந்தைசெலவம்  தெய்வக் குற்றம் நீங்கும்

வெள்ளை எருக்கன்  பட்டை தீபம் ,,,, பெருத்த செலவம் 

புது மஞ்சள் துண்டு திரி  ,,,வியாதி குண்மாகும்

புது வெள்ளை வஸ்திரம்   உத்தம பலன் 

முகம் ஏற்றுவது ,,,,,,ஒருமுகம் ,,,,சுமார் பலன் 

இரு முகம்   குடும்ப ஒற்றுமை 

மூன்று முகம் ,,,புத்திர சுகம் 

நாலு முகம்   பசு  பூமி ,,,,பெருகும் 

ஐந்து முகம் ஏற்ற   செலவ வளம் ,,,,,,,,

தோஷங்கள்  நிவிருத்தி ,,,,,,,,,ராகு தோஷம்  21 தீபம் 

சர்ப்ப தோஷம் ,,48 தீபம் 

கால சர்ப்ப தோஷம்  21 தீபம் 

களத்திர தோஷம்   108 தீபம் 

திருமணதோஷம்  21 தீபம் 

புத்த்ர தோஷம்  51 தீபம் 

நம்பினவர்களுக்கு  நாராயணன் என்பார்கள்  ,,,இதை செயவதில்  குடும்பத்திற்கு நல்லது 

என்பதால்   செய்து பார்த்து பலன்  பெறுக        அன்புடன் விசாலம்       


உயர் திரு பாம்பன் ஸ்வாமிகள்

April 4, 2007

அன்பு ஷைலஜா என்னிடம் பாம்பன்  சுவாமிகளைப் பற்றியும்  எழுதும்படிக் கேட்டுக்

கொண்டாள்.அவளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ,அவளால் தான் திரும்பவும்  அவர் சரித்திரத்தைப்  படித்தேன் ,அவ்ர் பற்றி நிறைய சம்பவங்கள் இருந்தப்

போதிலும்  முக்கியமானதை எடுத்து கவிதைப் போல் எழுதிகிறேன்  மற்ற சம்பவங்களை

சிறிது சிறிதாக பிறகு எழுதுகிறேன்  எல்லோரும் இந்த மஹான் வாழ்க்கையைப் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம் ,நன்றி

பாம்பன்  சுவாமிகள்,,,,,,,

வெள்ளிக் கிழமையில்  அவதரித்த சூரியோதயமே ,

திரு,சாத்தப்ப  செங்கமலத்தின் தவச்செல்வமே,

“அப்பாவு”என்ற நாமத்துடன் விளங்க ,

சர்வமத்மும்  சம்மதமாகக் கண்டவரே

நாகநாதர் கோவில் பிரும்மோத்சவம் நாளில்

“சிவ சிவ”என்ற நாமம்  உச்சரிக்க,

அம்மந்திரத்திற்குள் மூழ்கிவிட்டவரே,

“சஷ்டிக்கவசம்  அவரை ஈர்க்க ,

தானும்  அதைப் போல் பாடத் துடிக்க 

முருகன்  அருளும் பூரணமாய்க் கிட்ட

“கங்கையைச்சடையில் பரிந்து”என

அடிகளும் எடுத்துக் கொடுக்க

நூறு நாடகளில் நூறு பாடல்கள்

“திருத்தணிகைப் பதிகம் முடிந்து ஒளிர்ந்தது 

2,,,தான் கற்ற மந்திரம்  கைவிட்டார்,

ஆசிரியர் கட்டளையை மதித்தார் 

“குருசேது மாதமாதவைய்யர் செவியில் மந்திரம் ஓத ,

சம்ஸ்கிருதம் படிக்க  ஆர்வமும் காட்ட ,

ஏழை  எளியவர்   தொண்டு புரிய  

வளர்ந்தார் ,,மேலும் அன்பை வளர்த்தார் ,,

3 ,,,கனவில் வந்தப் பெரியார் ஒருநாள்,

 வாழை இலையிட்டு பாலுஞ்சாதம்.

தன்னுடன் உண்ணத் தூண்ட இவரும் 

அங்கனமே செய்து,,,,விழித்துக் கொண்டார் 

உடன்  கவிபாடும் ஆற்றல் பெருக்கெடுக்க 

இசையும்  ஞானமும்  கூடுதல் பெற்றது ,,

தன் குழந்தை பால் குடியாமல்  அழ

தாயார் அதற்கு திருநீரும்   கேட்க, 

“ஆண்டவனைக்  கேள்” என்று இவரும் சொல்ல 

அன்னையும் அன்புடன் முருகனை  முறையிட 

 தோன்றினார் காஷாய உடையில் ஒருவர் 

 பிள்ளையை வாங்கி திருநீரும் பூசினார் 

துறவர நாட்டம்  மனதைத் தாக்க 

நண்பரும் இவரிடம் இதைப் பற்றிக்கேட்க

“பழனிப் போகிறேன்  “என்றப் பொய்யும் சொல்ல 

உத்தரவு  பெற்றாயா?என்று நண்பரும் வினவ

ஆம் “என்று அழுத்தமாகச் சொல்ல ,

கோபத்துடன் முருகனும்  தோன்றி

“பொய் ஏன் பகர்ந்தாய் பகதா நீ

என் கட்டளை வரும் வரை  பழனி வராதே”

அந்த வாக்கைக் காப்பாத்திய செம்மல்    ,

4,,,ஒரு சமயம்  வமன பேதி இவரைத்தாக்க

மூர்ச்சையாகி தரையில் விழவும்

காஷாய குரு நேரே தோன்றி

கைப்பிரம்பால்  அவரைத்தட்ட

திருநீரை இட்டு மரண்த்தை நீக்க

உயிர் பிழைத்து நின்றார் வென்றார்

மயானத்தில்  சதுரக்குழி அமைத்து

,மேலேக் கொட்டகையும் மூடி

நான்குப் பக்கம் வேலியும் கட்டி ,

“பிரப்பன் வலசைத் தவம் தொடங்க 

“குமரக் குரு என்று முழங்கி யோகம் துவங்க

வடக்கு நோக்கி  அமர்ந்துக் கொள்ள,

,பாம்பும் ஓட  பேய்களும்  சூழ ,

மேகத்தண்டத்தால்  அவரும் அடிக்க

ஓடாதப் பேய்  சரவணமந்திரத்தில்  ஒடி மறைய

ஏழாம் நாள் முருக தரிசனம் 

திருநீரும் பூசி உபதேசம் கொடுக்க

முப்பத்தைந்தாவது நாள் வெளியே வந்தார் ,,

5,,,பல க்ஷேத்திரத் தரிசனம் 

மனமத ஆண்டு துறவு பூண்டு

சென்னை மண்ணை அன்புடன் மிதித்தார்

குதிரை வண்டி ஒன்று நிற்க

யாரோ ஒருவர் அழைத்துச் செல்ல

பங்காரு அம்மையார்  வீட்டில்  இறங்க

முன்னம் தினம் நாள் கனவில் தோன்றி

அன்னம் கேட்டத்தகவலை  சொல்ல

அங்கேயே  அன்புடன் தங்கி

முதல் இடம் கொடுத்த  அம்மையார்

என்றும் அவர் மனதில்  நின்றார்

குமாரான்ந்தம் “நாமம் சூட்டினார்

முருகனே அவரின் வைத்தியரானான்

தீராத நோய்களையும் தீர்த்து வைத்தான்

6,,தேகம் உலகம்  மயை ஆனது

தன் சீவனை முடித்து முக்திப் பெறவே

சொல்லாமல் கொள்ளாமல் திருவற்ரியூர் செல்ல

நடந்தே சென்றாமையால்  கால்கள் தளர 

பசி வேதனையில்  கள்ளிப் பழம் உண்ண

மரத்தடிகீழ்  முருகா”என்று சத்தமிட

ஒரு பெரியார் தோன்றி சத்திரம் போக

உண்வுக் கொடுத்து உபசரித்தனுப்ப

யார் அவர் சாட்சாத் முருகனேதானோ?

புதல்வன் மரணத்தை முதல் நாளே உணர

வரிசையாக தன் இரு மகன்களை இழக்க

“வந்தக் காரியம் முடிந்தது” என்று சொல்ல

திரும்ப்வும் நிஷ்டையில் அமர

இறைவன் சிந்தனையே முழுவது சூழ

பௌர்ண்மி நாட்களில் கடலுக்குச் செல்ல

நீண்ட நேரம்  போதனையில் கழிந்தது 

7 தம்புச்செட்டிதெருவில் ஒருநாள் 

குதிரைவண்டி இவர் மேல் மோத 

காலும் முறிய வைத்தியர்கள்   கைவிட

ம்ருத்துவனையில் ப்தினோறாம் நாள்

இரு மயில்கள் வந்து நடமாட 

 அழகுக் குழந்தை இவரருகில் படுக்க 

ஒரு பகதர் ஷ்ண்முகக் கவசம் ஓத 

சுவாமிகளின் காலை அழகு வேல் தாங்க 

 நிழல் படத்தில்  காலும் பொருந்தியிருக்க 

ம்ருத்த்துவ மனையே கண்டு வியக்க 

கால் சரியாகிக் கந்தக் கோட்டம் செல்ல 

தன் காலை சரியாக்கிய மயிலை நினைக்க 

“ம்யூர வாஹன சேவன் விழா “தொடங்க 

அன்புக் கட்டளை இட்டார்  அவர் ,,,

8 பெங்களூர் வந்த ஒரு நாள் அவரும் 

முருகன் நாமம் சூழப் படுத்தார் 

படுத்த உடனே பேரொளிக் கண்டார் 

இதயக்கமலம் எழுவதை உண்ர்ந்தார் 

வேலும் மயிலும் அவலுடன் அழைத்தார் 

பின் ஒளி மறைந்து இருள் சூழ்ந்தது 

தன் முடிவுத் தெரிந்தது ,சென்னை வந்தார் 

திருவான்மயூரில் நிலமும் பார்த்தார் 

தன் சுவாசத்தை இழுத்து உந்தியில் அடக்கினார் 

,,பகதர்கள் கண் கலங்க அந்த நாளும்  வந்தது

அந்த நாளும் ஷஷ்டி திதி

அவிட்ட ந்க்ஷ்திரத்தில்  ஜீவ சமாதி

முருகன் ஒருவனையே பாடிய சுவாமி

போற்றி போற்றி  பாம்பன் சுவாமி

ஒம் சரவணபவ ,,,,,,,,,,

அன்புடன் விசாலம்


April 4, 2007

சிதம்பரமும்  மதுரையும்  இரண்டு விஷய்ங்களுக்குப் பெயர்  போனது  மதுரை பெண் ஆட்சி

சிதம்பரம்  ஆண் ஆட்சி, வீட்டில் ஆண் ஒங்கி இருந்தால்  உங்கள் வீட்டில்  சிதம்பரமா ? என்பார்கள்

இது இரண்டும் தனிப்பட்ட முறையில்  இயங்காமல் இரண்டும் சேர்ந்து இயங்கும்  இயக்கம்தான்  சிவ சக்தியின் பெருமை, இந்தச் சக்தி சிவனுடன் சேர்ந்த தினம் தான்

கார்த்திகை அத்துடன்  ஆறுமுகம் பிறந்த தினமும்  கூட ,துர்கை  சக்தியின் பின்   மறைந்து

மகிஷாசுரனை வதைத்த தினம்  அடி முடிக் காணாமல்  அக்னிப் பிழம்பாய்  சிவனாய் வந்து தரிசனம்  கொடுத்த தினம்

நாம் சிவ சக்தியைச் சற்றுப் பார்ப்போம் நம்  நாட்டில்  தற்போது நிலைமைக்கு விட்டுக் 

கொடுக்கும் தனமை  வளர்க்க சிவசக்தி பாவம் மிகவும் முக்கியம் ,ஆண்பாதி  பெண்பாதி என்று  வந்து மிகப் பெரிய தத்துவத்தை உண்ர்துகிறார் அர்த்தநாரீஸ்வரர் ,,,இருவரும் வாழ்க்கையில் சரிசமமாகப் பின்னப்பட்டவர்கள் என்று எடுத்துறைக்கிறார், கடவுள்  காண்பித்தாலும்  ஆண் ஆதிக்கம் தான் அதிகமாகத் தென்படுகிறது ,நீரில் எப்ப்டிக் குளிர்ச்சியோ நெருப்பில் எப்படி வெப்பம் பிரிக்க முடியாதோ ,அதே போல் சிவ்த்திலிருந்து

சக்தி பிரிக்க முடியாது சிவ சக்தியுடன்  இந்தப் பிரபஞ்சம் உண்டானதால்  சிவன் தந்தையாகவும் சக்தி தாயாகவும் வருகிறார்கள்,

இப்போது புராணத்தைப்  பார்ப்போம் ,சிவபெருமான் தியானத்தில் இருக்க  அப்போது பார்வதி  அங்கு வர  , தியனத்திலேயே மூழ்கியிருப்பதைப் பார்த்து  பார்வதி  அருணாசல மலைக்குச்

செல்ல  தானும்   தவம் இருக்கிறாள் பின் பார்வதி அருணாசலேஸ்வரரைப் பார்த்து  அவரே சிவன்  என்று உணர  அவரிடம் செல்ல அவரும் பார்வதியைத்  தன் பாதி பகுதியில் 

சேர்த்துக் கொண்டார் அர்த்தாங்கினி  என்று சொல்வது வழக்கம்  இதைத்தான்  ஆங்கிலத்திலும்

better half என்கிறார்களோ?,,திருவண்ணாமலையில் இந்தக் கார்த்திகைத் தீபத்திருநாளில் 

அர்த்தநாரீஸ்வர்ரும்  தேரில் பவனி வருவார்  ,,,,,,,,ஓம் சிவசகதி ,,,,,,,,,,

அன்புடன் விசாலம்   

Reply Reply to all Forward

கண்ணிற்கு மை

April 4, 2007

“கண்ணிற்கு மையழகு  ,,,,,,,என்ற பாட்டு கேட்டேன்  தவிர அந்தக் காலத்தில்  தாயார்

தன் குழந்தைக்கு “காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா   ,,குருவி கொண்டைக்கு

பூ கொண்டுவா என்று பாட  குழந்தை தன் பொக்கை வாயைக் காட்டிச் சிரிக்க

ஆசையுடன்  மடியில் இருக்கும்  குழந்தையின் கண்ணில் மை இட்டு நெற்றியிலும் ஒரு திலகம் எழுதி ,,,,ஆஹா அந்தக் காட்சியும் அன்னையின் முகத்தில்  ததும்பும்  ஒரு பெருமிதமும் 

என்னவென்று சொல்வது?    பெண்கள் தங்கள் கண்களை மேலும்  அழகாகிக்க  அவர்கள்  

கண்ணிற்கு அழகைக் கொடுப்பது  கண் மை ,சின்ன கண்களை பெரிதாக தெரியப்படுத்தலாம் 

அவர்களைப் பார்த்தாலே  ஆண்களும்  சொக்கிப் போவார்கள் ,,இப்போது  அந்த மையைப் 

பற்றிப்  பார்ப்போம்  ,மை  மிகவும் சுத்தமாகத் தயாரிக்க வேண்டும் ,என் பாட்டி காலத்திலிருந்து 

வீட்டிலேயே மை   தயாரிப்பார்கள் அதற்கென்று நல்ல நாள் பார்த்து வளர்பிறையுடன் 

நல்ல திதியுடன் செய்ய ஆரம்பிப்பார்கள்  நல்ல  கடுக்காயும் சந்தனமும்  வழ வழ  என்று 

இழைத்து ஒரு செப்பு பாத்திரத்தில்  {பஞ்ச பாத்திரம்}      அந்த விழுதை  பின் பக்கம் தடவி 

பின் குமுட்டி  அடுப்பை மூட்டி மூன்று செங்கல் வைத்து அதை  வைத்து விடுவார்கள் 

அந்தக் கடுக்காய்  பேஸ்ட்  கறுப்பாய்  படலாக  ஆனவுடன்  அதை எடுத்து விளக்கெண்ணை 

சில சொட்டுகள் விட்டு   குழைத்துஒரு அழகான வெள்ளி  மைக்கூட்டில் அடைப்பார்கள்,

அதை தினமும்  கண்ணிற்குள் இட்டு வர கண்ணிற்கு   குளுமை  ஒரு பிரச்சனையும் வராது ,

இப்போது உபயோகப்படுத்தும்  ஐ லைனெர் என்பது  கண்ணிற்கு மேலே  அழகுக்காக

உபயோகிக்கப் படுகிறது,,,அழகுடன் ஆரோக்கியமும்   வேண்டுமே  ,,,

அந்தக் காலத்தில்  மாப்பிள்ளைக்கு  கல்யாண்த்த்ன் போது  விளையாடல்  சாமான் 

என்று  வைப்பார்க்ள்   அதில்   இந்த  மைக்கூடும் இடம் பெரும்   மீன் வடிவமாக  இரண்டுப் 

பக்கங்களும் திறக்கும்படி  அமைந்திருக்கும்  மாப்பிளையும்  மை இட்டுக் கொள்வார் 

எதற்கு இந்த மைப் புராணம்  என்றுக் கேட்டால்     விடாமல்  சுத்த் மை இட்டுக் 

கொள்பவர்களுக்கு மெட்ராஸ் ஐ    வருவதில்லையாம் ,ஆனால் சுத்தக் கடுக்காய் மையாக 

இருக்க   வேண்டும் ,,,செயற்கை ஐ லைனெர் ஐ வீசிவிட்டு  கண்ணிற்கு மை எழுதுவோமா?

மெட்ராஸ் ஐலிருந்து      விடுதலை  பெறுவோமா?

அன்புடன் விசாலம்    

Reply Reply to all Forward


ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

April 4, 2007

கருணா சாகரம்  சாந்தம்

அருணாசல  வாசினம் 

ஸ்ரீ சேஷாத்ரி குரும் வந்தே

பிரும்ம பூதி  தபோநிதிம்

அன்புத் தாய் மரகதம்

பெற்றெடுத்த உத்தமனாம் ,

சேஷாத்ரி என்ற பெயரும் சூட,

ஒரு மரகதமாக்வே ஒளிர்ந்தார் ,

ஒரு தெய்வக் குழந்தை ஆனார்

ஒரு சித்தப் புருஷர் அவதரிதார் 

ஒருநாள் ,,,தாயுடன்   அவர் ,,,

பொம்மைக் கடைக்குச்செல்ல

பொம்மைக் கேட்டக் குழந்தை

ஒரு கிருஷ்ண பொம்மை எடுக்க

காசு வாங்க மறுத்தார்  ,,கடைக்காரர்

அந்தத் தங்கக் கையைப்

பிடித்தும்  கொண்டார் .

“சாதாரணக் குழந்தையில்லன்  இவன்

கைப்பட்டாலே  பொன்னாகும் அம்மா”

பெற்றோரின் மறைவு

மனதில் புகுந்த வைராக்கியம்,

சேஷாத்ரி உதித்தது   நம்  பாக்கியம்

ம்னம் போனது  இறைச் சிந்தனையில் ,

நேரம்  கழிந்தது  சிவபூஜையில் ,

மயானத்திலும்   உபாசனம் ,

சிவபெருமானின் த்ரிசனம் ,

வானத்தில் பாடிப் பறக்கும் 

தேவதையும்  கண்டார்  ,

பார்த்ததைப் பகிர்ந்தும் கொண்டார் ,

“பைத்தியம் பிடித்தது  ‘என்ற உறவினர்,

மயானம் போனால் வீடும் நுழையாதே’

என்ற உத்தரவும்  பிறந்தது ,

வீட்டை விட்டார் ,

கோவிலில்  அடைக்கலம் ,

கண்டார் ஒரு பொன்மேனி யோகியை

அவர் அணிந்தது தேங்காய்கப்பறை ,

நான்கு சீடர்கள் உடன் இருக்க .

தட்சிணாமூர்த்தி தரிசனம் ,

மெய்சிலிர்த்தார்

பரவசமானார் ,

கண் நிரம்பி  குளமாகி கைக்கூப்பி

உடலும் விழுந்தது சாஷ்டாங்கமாக ,

அவர் நிலைக் கண்ட குரு ,

திருவாய் மலர்ந்தார்

அருளினார்  நயன தீக்ஷை

வழங்கினார்  ஞான உபதேசம்  ,

தன் நிலை மறந்தார் ,

தன்னையு,ம் மறந்தார் ,

வந்தனர்  உறவினர் ,

“தகப்பனார் சிரார்தம் “

அழைத்தனர்  அதட்டலுடன் ,

மசியவில்லை சேஷாத்ரி

“நான் சன்யாசி 

சன்யாசிக்கு  கர்மமேது ?

வலுக்கட்டாயமாக

இழுக்கப்பட்டார் 

திதி முடியும் வரை

தள்ளப் பட்டார்  ஒரு அறையில்

கதவும் பூட்டப்பட்டது ,

பித்ரு கர்மா முடிந்தது 

கதவும் திறந்தது

“சேஷாத்ரி…சேஷாத்ரி,,,

எங்கே போனாய்?

எங்கே போனார் ,எப்படிப் போனார்?

மாயமாய்  மறைந்து விட்டாரே !

சித்த புருஷர் ஆயிற்றே

அடைத்து வைக்க முடியுமா ?

திருவண்ணாமலை  ,,

சித்தர்கள் க்ஷேத்திரம்

முக்திக்கு  பாத்திரம் 

அங்கும்  இங்கும் அலைந்தது 

சேஷாத்ரி என்ற பாத்திரம் 

வானமே கூரை 

எங்கும் இருந்தார்  ,

எதையோ சாப்பிட்டார் ,

எல்லோரையும்  வண்ங்கினார் 

“ஸர்வம்   பிரும்ம மயம் “

எங்கும் பிரும்மத்தைக் கண்டார் ,

ஒரு ஏழு கழுதைகளை  வண்ங்கி 

கண்களில் ஒத்திக் கொள்ள்

சிரித்தனர்  மக்கள் ,

ஒருவர் துணிச்சலுடன் கேட்டார் ,

“எனப்பா ,,,கழுதையை ஏன் 

கண்களில் ஒற்றிக் கொள்கிறாய்?

“கழுதையில்லை அப்பா இது

சப்த ரிஷிகள் அல்லவா ?

அஹஸ்தியர்   ஜமதக்னி ,,,,,,

என்று வரிசைப்படுத்த

மக்கள் மெய்மறந்தனர்

நடமாடும்  இறைவன்  ஆனார்

பேசும்  தெய்வம்  ஆனார் 

அவதார  புருஷ்ர் ஆனார் 

அரும் பெரும் சித்தர்  ஆனார் 

அருணாசலேச்வருடன் கலந்தார் 

 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அவர் சரித்திரம் படித்தப்பின்  த்போவன்ம் சென்று  அவர் தரிசனம் செய்து வந்தேன்

அந்தத் தினத்திலிருந்து  அவர் சரித்திரத்தை எழுத  ஆவலாக இருந்தேன் ,ஒரு  சிறு முயற்சி 

அவ்வளவுதான்  , தயவு செய்து படிக்கவும் ,,,,அன்புடன் விசாலம் . 


அன்பின் ஒளி “சாய் ராம் “

April 4, 2007

அன்பு சாயி அன்பர்களே   பக்தர்களே  நவம்பர் 23 நம் சாயிராமின்  81ஆவது பிறந்தநாள்

அவ்ரினால் தான் நான் இன்று உயிருடன்  இருப்பதை என்னால் மறக்க முடியாது ,.அவருக்கென்று ஒரு  ஊஞ்சல் பாட்டு “லாலி ,,,,,,,, இயற்றி அவருக்கு பாதக்

காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்  

ராகம்  வலசி      தாளம்  ஆதி  { வேறு ராகத்திலும்  அமைத்துக் கொள்ளலாம் ]

சுருண்ட முடி மாதவனே  ஸ்ரீ சத்ய சாயீ,

அன்பு ஒளி அள்ளிவீச ஆடுகிறார்  ஊஞ்சல் 

ஆடுகிறார் ஊஞ்சல்   ,,ஆனந்தமாக 

ஆனந்த சாயி   ஸ்ரீ சத்ய சாயி 

லாலி   சுப லாலி,,,,,,,,லாலி  சுபலாலி 

சத்ய தர்ம    சாந்தி  பிரேம ஸ்ரீசத்ய சாயி

பர்த்தியில் வந்துதித்த  கருணாமூர்த்தி சாயி 

முத்துப்பல்   ,சாந்தமுகம்  புன்னகையுடன் விள்ங்க 

பக்த கோடி  அன்பர்களுக்கு ஆசிகொடுக்கும்  சாயி 

ஆடுகிறார் ஊஞ்சல்   ஆனந்த சாயி 

லாலி   சுப லாலி  ,,,,,,

ஈச்வராம்பா   ,தாய்  ஈன்ற   மாணிக்கமே சாயி 

ஒழுக்கம் பெற்ற  கல்வி நிலயம் நிர்வகிக்கும் சாயி 

பலரின் நோயைத் தீர்க்கும்  வைத்தியநாத சாயி 

உன்  கமலப்  பாதம் பணிந்து நின்றேன் ,,ஆசி வேண்டும்  சாயி 

ஆடுகிறார் ஊஞ்சல்  ஆனந்த சாயி  

ஆனந்த சாயி  ஸ்ரீசத்ய சாயி,,

லாலி  சுப லாலி    லாலி  சுப லாலி    

அன்புடன் விசாலம்        


சாம்பலின் பெருமை

April 4, 2007

ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய சாம்பல் நல்ல நதியில் தூவப் படுகிறது .

சிலர் காசிக்குச் சென்று கங்கையில் கறைப்பார்கள்,அன்னை இந்திரா காந்தி அவர்களின் அஸ்தி இமயமலையிலும் கூட ஹெலிக்காப்டரில் எடுத்துச் சென்று மேலிருந்து

தூவினார்கள்,ஆனால்  ஒருவனது  சாம்பலை அந்த கிராமத்தில்  இருக்கும்  ஒவ்வொரு

இளம் தாயும் தங்கள் வயிற்றில்  அந்தச் சாமபலைப் பூசிக்கொண்டார்கள், ஏன் என்றால்

தங்களுக்கும்  இதுப் போல் ஒரு மகன் பிறக்க வேண்டும்  என்பதால்  ,,,,,,,

ஆம்  அந்த வீர மகன்  ,எல்லோராலும் போற்றப்பட்ட   மகன்  நாட்டுக்காக தன் உயிரையே கொடுத்த  தியாகி  இள்ஞ்சிங்கம்   ஸர்தார்  பகத் சிங் தான் , 1931ல் மார்ச் 23ந்தேதிபகத் சிங்கை

தூக்கிலிட்டு,பின்  வெள்ளையர்கள் அவனை எரித்தச் சாம்பலை அவன் தாயிற்கு  அனுப்பி வைத்தனர் ,அந்த வீரத்தாயைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் ,பாவம்  தந்தை மனம்

சோர்ந்து ஒரு கருணை மனுக் கொடுத்தால் மகனைக் காப்பாற்றலாம்  என்று வக்கீல்  சொல்லக்  கேட்டு ஒரு மனு பத்திரம் வாங்கியும்  வந்தார் ,தன் மனைவியைக் கூப்பிட்டார் ,

“பகத்சிங்கின்  தாயே  நமக்கு  நம்  ம்கன்  வேண்டாமா?இந்தக் கருணை மனுவில்  ஒரு கையெழுத்துப் போடு

நான் போட்டுவிட்டேன் ,நீதான் பாக்கி” என்று அந்தப் பத்திரத்தைக் கொடுத்தார் ,அந்தத் தாய்  அதை வாங்கி

பொறுமையாகப் ப்டித்தாள்,  பின் சுக்குக் சுக்காகக்

கிழித்துப் போட்டாள் “மானமில்லையா எனக்கு ? வெள்ளையினிடம்  போய்  உயிர்ப்பிச்சை  கேட்க வேண்டுமா?என் மகன்  வெள்ளையனுக்கு  எதிராக நின்று

 ஜயித்து  வெள்ளையனை வீழ்த்தினான்  என்ற பெருமையிலே  அவன்  சாவதை நான் விரும்புவேனேத்

தவிர  கருணை மனுப் பெற்று உயிர் வாழ்வதை  நான் விரும்ப மாட்டேன் அவன் கோழயில்லை  வீரன்  என் மகன் வீரன்  அவன் புகழோடு மடிவதைப் பார்த்தாலும்

பார்ப்பேன் வெள்ளையன் தயவில் உயிருடன் அலைவதை ஒருக்காலும்  விரும்ப மாட்டேன்   “

ஆஹா  இப்படி ஒரு தாயா ? தலை வண்ங்குகிறேன்  தாயே  ,,,,,,,,,,

அன்புடன் விசாலம்


காந்திஜியே வாரீர்

April 4, 2007

காந்திஜியே  கீழே சற்று இறங்கி வாரீர்

நாட்டின் நிலைமையைச் சற்று  பாரீர் ,

சத்திய சோதனையில்  வெற்றி அடைந்த  நீங்கள்,

இன்று சத்தியம் எங்கே  என்று தேட வாரீர்

எளிமையையே  கடைப் பிடித்த  நீங்கள்,

இங்கு பணத்தின் திமிரை அடக்க வாரீர்,

அஹிம்சைக் கொண்டே ஜெயித்த நீங்கள்,

ஹிம்சைக்கு ஒரு வேலி போட வாரீர் ,

அன்பே தெய்வம் என்றுரைத்த நீங்கள்,

இங்கு அன்பைத் தேடிக் கொடுக்க வாரீர் ,

தீவிரக் கொள்கையில்  திளைத்த  நீங்கள்,

தீவிரவாதத்தை  முறியடிக்க வாரீர்

தொழிற்கல்வி கொடுத்து சிறப்பித்த நீங்கள்

ஒப்பித்தெழுதும் படிப்பைக் களைய வாரீர் ,

கதரையே அணிந்து மகிழ்ந்த நீங்கள்

அந்த கதர் துணியைக் காட்ட வாரீர் ,

இயற்கையுடன் ஒன்றி  வாழ்ந்த  நீங்கள் 

இன்று இயற்கை அழிபடுவதைக் காணவாரீர 

லஞ்சம் என்ற பெயரையே வெறுத்த நீங்கள்

ம்லிந்து கிடக்கும்  லஞ்சத்தை  ஒழிக்க வாரீர்

குண்டுப்ட்டும் ராம் ராம்  என்று  கிழே சாய்ந்த,நீங்கள்

அந்த ராமரை  உணர வைக்க வாரீர் 

காந்தியே சற்று   இறங்கி  வாரீர்

நாடு போகும் போக்கைப் பாரீர் ,,,,,,,,,,,,,,

காந்தி ஜெயந்தியின் நன்நாளில்  அவர் கொள்கைகளை கடைப் பிடிப்போமாக

  விசாலம்
–~–~———~–~—-~————~——-~–~—-~
You